Skip to main content

சிவஞான சித்தியார் சுபக்கம் - செந்தமிழுரை

 

'ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
 நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் - பேறாகப்
 பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
 ஓர்விருத்தப் பாதி போதும் ’

என தருமையாதீன குருமுதல்வர் சிவபோகசாரம் நூலில் அருளியுள்ளார். மேலும் தாயுமானவர்,
'' பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்தமாக உண்மை
  சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ''

எனப் போற்றியுள்ளார். இத்தகு பெருமையுடைய நூலிற்குச் சித்தாந்த சரபம் மகாவித்துவான் முனைவர் சி அருணை வடிவேலு முதலியார் அவர்கள் செந்தமிழ் உரை வகுத்துள்ளார்கள்.
          1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் திருவருளால் 23 ஆண்டுகள் கழித்து அருள்நந்தி சிவனாரின் குருபூசை நாளான புரட்டாசித்திங்கள் பூரம் விண்மீன் அன்று முனைவர் அருணை பாலறாவாயன் அவர்களின் வழிகாட்டுதலுடன் கவின் பப்ளிகேசன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 
 
856 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 850 முன்பதிவு திட்டத்தின் அடிப்படையில் 700 ரூபாய் மற்றும் அஞ்சல் செலவு ரூபாய் 100 இலவசம் என மொத்தம் 250 ரூபாய் சலுகையாக வழங்கப்படுகிறது. 
 
அக்டோபர் 15 ஆம் நாள் வரை இச்சலுகை உண்டு என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
தொடர்புக்கு அ. அருண்சீனிவாசன்
 
73958 666 99 / 94864 22641...
 
வங்கி விபரம் :
KAVIN PUBLICATIONS , UNION BANK OF INDIA, CHINNA VEDAMPATTI Branch ,
( IFSC : UBIN0827363 ) Current Account : 273611100001361..
UPI ID: Kavin2021@uboi... 
 phonepe & Gpay 73958 666 99

Comments

Popular posts from this blog

கந்தரநுபூதி

  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவ்வுரை நூலுக்கு அளித்த அணிந்துரை   முருகப்பெருமான் திருவருள் முழுவதும் பெற்ற நம் அருணகிரி நாதர் அருளிச்செய்த கந்தரநுபூதியை அறியாதார் அறியாதாரே. பாராயண நூல்களுள் முடிமணியாக விளங்குவது இது. வடிவில் சிறியதும் கருத்தில் பெரியதுமாக விளங்குவது. " கந்த ரநுபூதி பெற்று கந்த ரநுபூதி சொன்ன எந்த யருள்நாடி இருக்கும்நாள் எந்நாளோ "  .... என்று தாயுமானப் பெருந்தகையார் உள்ளம் உருகி உணர்ச்சி ததும்பப் பாராட்டுவதனாலே இதன் கருதற்கரிய பெருமை தனிச் சிறப்புறுகின்றது.  சைவ பானுவும் சித்தாந்தச் செல்வருமாகிய மா. வே. நெல்லையப்ப பிள்ளை அவர்களின் அறிய பெரிய ஆராய்ச்சியால் எழுதிய உரை சாலச் சிறந்தது என்பது இதனை நுணுகிப் படிப்போர் உணர்வர். இதனை தமிழ் உலகம் படித்து இன்புறுவதாக. அன்பன் கிருபானந்த வாரி. https://www.kavinpublications.in/book/kandaranuputhi/?_gl=1*pfj62d*_ga*MTg4MjEzMTAyMS4xNzE0NDQ4NzIx*_ga_R0XG01D0MG*MTcxNDQ0ODcyMC4xLjAuMTcxNDQ0ODcyMC4wLjAuMA..

கையொப்பம் - கவிஞர் புவியரசு

 2009 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்களின் கையொப்பம் கவிதை நூலின் 4ஆம் பதிப்பினை  22.09.2023 வெள்ளிக்கிழமை அன்று பார்க் கல்வி நிறுவனங்களின் பொன்விழாவில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் வெளியிட, கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.இரவி அவர்களும்   கவிஞர் ஐயா அவர்களின் புதல்வி புவி.பாக்யலட்சுமி அவர்களும் பெற்றுக் கொண்டனர். உடன் தலைமை செயல் அதிகாரி அனுஷா அவர்களும் சந்திரயான் விஞ்ஞானி திரு.மயிர்சாமி அண்ணாதுரை அவர்களும்

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்